Monday, January 25, 2010

மந்திர கயிறு அது ஒரு தந்திர கயிறு

அது ஒரு கனா காலம். ஒரு கவலையும் இல்லாமல் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் ஊர் சுற்றிய காலம். வீட்டில் உள்ள பாட்டிகளுக்கும் அத்தைகளுக்கும் மற்ற நமது பதினெட்டு பட்டி உறவினர்களுக்கும் சேவை செய்து வந்த காலம். இவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் கடைகளுக்கு செல்லும் போதும் ஒரு வெட்கமும் இல்லாமல் அவர்களுக்கு சுமை தூக்கியாக இருந்த நேரம். அவர்கள் கொடுக்கும் அஞ்சு மற்றும் பத்து ரூபாயில் அனைத்து ஆஸ்பத்திரியின் கேண்டீன்களிலும் சாப்பிட்டு உடம்பை வளர்த்த காலம். அனைத்து கேண்டீன் முதலாளிகளும் நமக்கு நண்பர்கள் ஆகினர். GG ஆஸ்பத்திரியில் கேண்டீன் வைத்திருந்த ஜிமிக்கி மாமிக்கு என் மீது மிகவும் பிரியம். "ஏன்டா அம்பி சும்மாதான இருக்க கொஞ்சம் இட்லி மாவு ஆட்டி தாயேன். நேத்திக்கு வடை கொஞ்சம் மீந்து போச்சு , நாய்க்கு தூக்கி போடலாம்னு இருந்தேன். உன் நியாபகம் வந்துச்சு இந்தா சாப்புடு " என்று உரிமையாக சொல்லும் அளவுக்கு ஒரு பிரியம். இது கொஞ்சம் ஓவரா போயி நம்ம பதினெட்டு பட்டியில யாருக்கு உடம்பு முடியாம போனாலும் எனக்கு சேதி சொல்ல ஆரம்பிட்சாங்க. ஒவ்வொரு ஆஸ்பத்திரிலையும் ஒரு செட் ஜட்டி பனியனை கொடுத்து வைக்கிற மாதிரி ஆகி போச்சு. இப்படி நோபல் பரிசுக்கு போற அளவுக்கு நம் சமூக சேவை நடந்தது.
இந்த நேரத்துல ஒரு நாள் நம்ம பாடாவதி அக்கா மற்றும் பல உறவினர்களை அழைச்சுட்டு பர்மா பஜார் போக சொல்லி பாட்டி உத்திரவு. காலைல அழைச்சுட்டு போயி நைட்டு வரைக்கும் ஷாப்பிங். நான் கார்ல தேவுடு காத்தல். செலவுக்கு 20 ருபாய் கொடுத்துச்சு. நானும் அதுல நல்ல சாப்டேன். இரண்டு நாள் கழிச்சு பாடாவதி அக்கா வீட்டுக்கு போனால்(கூட்டு குடும்பம்) அங்க செலவு நோட்டுல ஜாங்கோ ஜக்கு சாப்ட்டு செலவு ருபாய் 50 அப்படின்னு போட்டு இருந்தது. பாத்தவுடன் எனக்கு தலை சுற்றியது. பா ..தி அக்கா பண்ண முப்பது ருபாய் செலவை என் பெயர்ல எழுதி இருந்தது. இப்படியே போன நம்மளை ஒரு ரேஞ்சுக்கு கொண்டு போயிடுவங்கன்னு பயந்து வேலைக்கு போக ஆரம்பிதேன்.
உடனே எங்க அம்மா எனக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு சொன்னாங்க
பா..தி அக்காவின் மூத்த அக்கா செந்தலை ( தலைக்கு பர்கண்டி கலர் டை அடிச்சுட்டு திருப்பதி கோயில்ல செக்யூரிட்டி ஜருகண்டி சொன்னப்ப பாரு என் தலைய பாத்து பருகண்டி சொல்றன்னு பெருமை பீத்துனதால வந்த பெயர்) அதுக்கு ஒரு பொண்ணு அதுக்கு ஒரு கண்ணு. அந்த பொன்னை இந்த வெட்டி பயலுக்கு கேட்டுடுவாங்கலோன்னு அதுக்கு ஒரு பயம். இதை வெளியில சொல்லவும் முடியல மெல்லவும் முடியல. அதுக்கு பொன்னை அமெரிக்க பையனுக்கு கொடுத்து அங்க ஜீன்ஸ் டி-ஷர்ட் பிகினி எல்லாம் போட்டு சுத்தணும் ஒரு ஆசை. இந்த பையனுக்கு பொன்னை கல்யாணம் பண்ணி வைச்சு கிராமத்துல அதை செய்றது ஒரு தயக்கம் ஒரு மயக்கம். எப்படி இவனை கழட்டி விடுருதுன்னு ஒரு யோசனை. உடனே முந்தானை முடிச்சு படம் நியாபகம் வந்தது. அதுல தீபா கிழவங்களுக்கெல்லாம் ஒரு கயிறை கட்டி அண்ணன்னு சொல்லுமே அதை மாதிரி செஞ்சுடிலாம் என்று யோசித்து, அந்த கயிறு என்ன என்று விசாரித்தது. அதன் பெயர் "ராக்கி " கயிறு என்றும் அது வடஇந்தியாவில் பிரபலம் என்றும் தெரிந்தது. அவசரத்துக்கு ராக்கி கிடைக்கததால் ஒரு மஞ்சள் கயிறை ஒரு சுப யோக சுப தினத்தில் அதன் பெண் சொக்கா கையில் கொடுத்தது. அந்த பெண்ணும் ஒரு மஞ்சள் கயிறோடு என்னை நோக்கி வந்து " மாமா " என்று கூப்பிட நான் அதை கல்யாணம் செய்ய சொல்ல போகிறது என்று பயந்து ஓட, நான் ராக்கியின் பொருள் தெரிந்து ஓடுகிறேன் என்று செந்தலை துரத்த , செந்தலை வளர்த்த அலமேலுவும் துரத்த தெருவே வேடிக்கை பார்த்தது. பிறகு எனக்கு விஷயம் புரிந்து நானும் ஒத்துகொள்ள ராக்கி வைபவம் முடிந்தது.
பிறகு தெருவில் வந்து "இனிமேல் ஜாங்கோ ஜக்கு சொக்காவுக்கு அண்ணன் , முறை பையன் இல்ல " என்று கத்தி அறிவிக்க , அந்த தெருவில் வயசு பொண்ணு வச்சிருந்த அம்மாக்கள் எல்லாம் செந்தலையிடம் டிப்ஸ் வாங்கி பேல் பேலாக ராக்கி கயிறை செந்தலலையிடம் விலைக்கு வாங்கி தெருவில் உள்ள ஆம்பிளைக்கு எல்லாம் கட்டுனாங்க. பெண் நாய் வளர்த்த எழுத்த வீட்டு பொட்டு மாமி , பக்கத்துக்கு வீடு ஆண் நாய்க்கு இதை கட்டி விட்டாங்கனா பார்த்துகோங்க நம்ம செந்தலையின் கயிரோட மகிமையை.
பி.கு : இந்த விஷயத்தை கேள்வி பட்ட என் அம்மா சொக்காவிடம் இருந்து தப்பியதுக்கு மண் சோறு சாப்பிட்டு பத்தாயிரம் ஏழைகளுக்கு அன்ன தானம் அளித்தார்கள்

Tuesday, January 12, 2010

ராமராஜனின் போட்டியாளர் கணினி பொறியாளர் ஆன கதை

முதல் படி அல்லது அடி :
அந்த நாள் மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் இருந்த மாடுகளுக்கு ஒரு கருப்பு நாள். வளரவேண்டிய ஒரு மாடு மேய்ப்பன் (கௌபாய் ) கொல்லப்பட்ட ஒரு நாள். ஊரில் இருக்கும் அணைத்து சொந்தக்களும் பந்தங்களும் சுற்றி நின்று வரவை எதிர்பார்க்க ஜாங்கோ ஜக்கு என்று அழைக்கப்பட்ட நமது ஹீரோவின் என்ட்ரி. சுற்றி இருந்த சொந்தங்கள் "கண்ணு பட போகுதையா சின்ன தம்பியே " என்று பாடி குலுவையிடஅந்த சின்ன தம்பியின் கண்களில் கண்ணீர். ஏன் இந்த கண்ணீர்? ஊரே திரண்டு விடை தேட " நான் பள்ளி கூடம் போலை நான் மாடு மேய்க்க போறேன் . என்னை விட்டுடுங்க என்னை விட்டுடுங்க " என்று நமது ஹீரோ அலற அலற "மயிலாடுதுறையின் ரோல்ல்ஸ் ராய்ஸ் " என்று அழைக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டார். வண்டி மாடோ நமது ரட்சகன் இனமான காவலன் இப்படி கொடுமை படுத்த படுகிறாரே என்று நடக்க மறுக்க நினைத்தாலும் மதியம் கிடைக்க போகும் வைக்கோலுக்கு சி கு எங்க ஆப்பு வைத்திவிடுவரோ என்ற பயத்தில் மெதுவாக நடந்தது. மற்றது அடுத்த இதழில்

யானைகள் நாய்கள் ஆன கதை

எங்கள் குடும்ப ராஜ குரு மற்றும் பல பேரின் வாழ்நாள் துன்பங்களுக்கு காரணமான து -- என்ற பா.சு ஐஎரை கண்டாலே எங்கள் குடும்பத்து ஆண்களுக்கு ஒரே கோபம். ஆத்திரம். ஏனென்றால் எதாவது பேசி அவர்கலுக்கு திருமணம் நடத்தி விடுவார். எனது மாமா ஒருவர் ஒவ்வொரு கல்யாணதில்லையும் குத்து கவுண்டர் போட்டு அதில் வரும் பணத்தில் அனாதை ஆசிரமத்திற்கு நன்கொடை அளிக்க முயன்றார். பலருக்கு இந்த ஐடியா பிடித்தாலும் பெரிசுகளின் அதட்டலால் அதை செய்ய முடியவில்லை. நல்ல சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். வந்தது ஒரு சந்தர்ப்பம்.திட்டம் தீட்டப்பட்டது. மலை முழுங்கி மகாதேவன் என்றும் "Drunken Monk" என்று பாராட்டப்பட்ட பா.சு விற்கு மணி கட்ட தீர்மானிக்கபட்டது. இடம் :சென்னை. நிகழ்ச்சி: ஹீரோவின் தாத்தாவிற்கு ஒரு ஹோமம். அதற்கு வந்தவர் பலர். அதில் ஒரு வினோத ஜோடி. கா மற்றும் த. இருவருமே பா.சு வை பதம் பார்க்க திட்டம் தீட்டினர். தங்களால் அதை செய்ய முடியாது என்றதால் அதை செய்து முடிக்க இளிச்ச வாயர்களை தேடினர். அவர்களுக்கு உடனே நினைவுக்கு வந்தது நமது நாயகன் மற்றும் அவரது முந்திரி கொட்டை மச்சான் "ம". இந்த இருவருமே அழைகபட்டனர். எதோ சாப்பிடதான் கூபிட்றான்களோ என்று நினைத்து அந்த இருவரும் சென்றனர். அப்போது பா.சு இவர்கள் இருவரையும் அழைத்து தாகமா இருக்கு ஒரு சோடா வாங்கிட்டு வாங்க, ஒரே தலை வலி என்றார். கா மற்றும் த ஜோடிக்கு பொறி தட்டியது. உடனே அவர்கள் பா.சு விடம் "அய்யா நாங்க சொல்றோம் என்று சொல்லி எங்களை அழைத்தனர் அய்யாவுக்கு போயி நல்ல சோடாவும் அப்படியே ஒரு சாரிடானும் வாங்கிட்டு வாங்க, அதோட அந்த சாரிடானை பொடி பண்ணி அந்த சோடாவில் கலந்து கொண்டாங்க என்று என்று சொல்ல இந்த சுந்தோப சுந்தரர்கள் கிளம்பினார்கள். சோடாவை வாங்கி விட்டு மருந்து கடைக்கு போய் ஆறு சாரிடான் வாங்கி நாடு ரோட்டில் உட்காந்து கல்லை எடுத்து பொடி செய்து சோடாவில் கலக்கி திரும்பவும் மூடி எடுத்து வந்து பா.சு விடம் கொடுப்பதுக்குள் ஞா சு குறுக்கே வந்து எனக்கு சோடா குடு என்று சொல்ல , இல்லை இல்லை இது பா.சு விற்கு ஸ்பெஷல் சோடா என்று சொல்லிவிட்டு பா.சு விடம் கொடுத்தனர். பா.சு வும் தம்பிங்களா உங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல சுசு(சுந்தோப சுந்தரர்கள் ) குஷியாக இருந்தனர். கலக்கல் சோடாவை குடித்த பா.சு வின் உடல் குளிங்கியது. கண்கள் விஜயகாந்த் கண்கள் போல சிவந்தது. பிறகு தள்ளடியாபடியே வீட்டிற்குள் தொலை காட்சி பார்க்க சென்றார். அங்கு குருவாயூர் யானைகளை பற்றி ஒரு டாகுமெண்டரி டீவீயில் ஓடியது.அதை பாசு உற்று உற்று பார்த்த படியே சிரிக்க மக்களுக்கோ ஒரு அதிர்ச்சி.
திடீர் என்று "21 dogs 21 dogs " என்று பாசு சொன்னார். பார்த்த மற்றும் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி. அவர் யானை பார்த்துதான் நாய் என்றார் என்பதும் சுத்தி நின்ற 18 பட்டி மக்களுக்கும் புரிந்தது. நாங்கள் செய்த விஷமமும் தெரிந்தது. பிறகு அவர் கண்களில் தாரை தாரையா கண்ணீர் வழிய அப்போது எங்கிருந்தோ "கண்ணில் என்ன கார்காலம், கன்னங்களில் நீர் கோலம் " என்ற பாடல் ஒலித்தது.அவரை கை தாங்கலாக பிடித்து போய் படுக்க வைத்ததும் நாங்கள் இருவரும் திட்டு வாங்கியதும் கனவு போல இருக்கிறது.
இரவு முழுவதும் அவருக்கு உடம்பு தூக்கி தூக்கி போட்டதாகவும் , அந்த சத்தத்தை கேட்ட எழுத்த வீட்டு அண்ணி " யார் அது நைட்டுல உரலை இடிக்கிறது " என்று கேட்டதாகவும், அவர் உடம்பில் இருந்து ஆவி பிரிய இருந்ததாகவும் , இன்னொரு வாத்தியாரை பூஜைக்கு ஏற்பாடு செய்ததாகவும் ஒரு பேச்சு இன்னமும் இருக்கு.
ஆனால் எல்லோருக்கும் முன்னாடி பாசு எந்திரிச்சு பூஜைக்கு ரெடி செய்து கொண்டிருந்ததை பார்த்து அனைவரும் தலை சுற்றி சாய்ந்ததுதான் இந்த கதையின் ஹைலைட்டு.
சோடாவில் சாரிடான் கலந்தால் போதை வரும் என்று யாரோ சொல்லியதை டெஸ்ட் செய்து பார்க்க விரும்பிய கா & த குழுவினர் செய்த அலம்பல் இது.
பி.கு : இந்த formulavai திரு.த.. கம் patent செய்து பெரும் பணக்காரர் ஆகி விட்டதாக ஒரு செய்தி அடிபடுகிறது. நிசமா?

ஜாங்கோ ஜக்குவின் முன்னுரை

என் இனிய தமிழ் மக்களே , நேற்று வரை ஆங்கிலேய வலை தளத்தில் பொழுதை போக்கிய நான் இனிமேல் தாய் தமிழில் என் அனுபவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். பிறந்தது மயிலாடுதுறை மாநகரம் . வளர்ந்ததும் வெட்டியாக சுற்றியதும் படிப்பதாக பொய் சொல்லி திரிந்ததும் அங்கேயே. எனக்கு கொசுவர்த்தி நினைவுகளை உண்டு செய்த அபிஅப்பாவுக்கும்சீமாச்சு அண்ணாவுக்கும் நன்றிகள் பல